சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்களது குறை களை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்
துள்ளார்.