உள்ளூர் செய்திகள்

ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேட்டூர் அணை பூங்காவிலும் காலை முதலே குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அணை முனியப்பனை தரிசனம் செய்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

சேலம்:

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்ைட மாநி லங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுல ாபயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

ஏற்காட்டில் குவிந்தனர்

அதன்படி சனிக்கிழமையான இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். குடும்பம், குடும்பமாகவும், காதல் ஜோடிகளும் அதிக அளவில் வாகனங்களில் ஏற்காட்டிற்கு வந்தனர்.

இதனால் ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, மீன் பண்ணை, சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், படகு குழாம் உள்பட பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக படகு குழாமில் குடும்பத்துடன் உற்சாகமாக சவாரி சென்று மகிழ்ந்தனர்.

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் தங்கும் விடுதிகளிலும் கூட்டம் நிரம்பி காட்சி அளித்தன. இதனால் லாட்ஜ் உரிமையா ளர்கள் மற்றும் வியாபாரி கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உயிரியல் பூங்கா

இேத போல குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள குரங்குகள், மயில்கள், மான்கள், பாம்புகள், பறவைகளையும் பார்த்து மகிழ்ந்தனர்.சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை பூங்காவிலும் காலை முதலே குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அணை முனியப்பனை தரிசனம் செய்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊஞ்சல் ஆடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். அங்குள்ள் பாம்புகள், முதலைகளையும் பார்வை யிட்டனர். அணையின் பவள விழா கோபுரத்திற்கும் சென்று அணையின் அழகை பார்த்து ரசித்தனர். காவிரியி லும் குடும்பத்துடன் உற்சாக மாக ள குளித்து மகிழ்ந்தனர்.