உள்ளூர் செய்திகள்

ஊரப்பாக்கத்தில் கொள்ளையன் கைது

கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் ஊரப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.வீரமுத்து நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

வண்டலூர்:

கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் மற்றும் போலீசார் ஊரப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வீரமுத்து என்பதும் நண்பர்களுடன் சேர்ந்து தனியாக செல்பவர்களை குறிவைத்து நகை, செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து வீரமுத்துவை போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT