தீ வைக்கப்பட்ட மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 
உள்ளூர் செய்திகள்

மர்மநபர்களால் தீ வைக்கப்பட்ட மரம் அகற்றம்

பழமையான தூங்குமூஞ்சி மரத்திற்கு மர்ம நபர்கள் யாரோ வைத்த தீயால் மரம் முற்றிலுமாக எரிந்து கருகி சாய்ந்தது.நீண்ட காலமாக நிழல் தரும் வகையில் இருந்த மரம் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது.

நீடாமங்கலம்:

வலங்கைமான் தாலுகா கோவிந்தகுடி, ஆவூர் இடையே உள்ள பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நூற்றாண்டு பழமையான தூங்குமூஞ்சி மரத்திற்கு மர்ம நபர்கள் யாரோ வைத்த தீயால் மரம் முற்றிலுமாக எரிந்து கருகி சாய்ந்தது . அம்மரத்தை ஊராட்சி மன்ற நிர்வாகிகள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக நிழல் தரும் வகையில் இருந்த மரம் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது. அப்பகுதி மக்களிடையே கவலை அடைய செய்தது.