உள்ளூர் செய்திகள்

மின் ஒயர் அறுந்து விழுந்து தொழிலாளி சாவு

பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் அண்ணா சாலையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53), பீடி சுற்றும் கூலி தொழிலாளி. நேற்று இரவு ஆற்காடு, மேல்விஷாரம் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

அந்த நேரத்தில் சுப்பிரமணி கீழ்விஷாரம் மாரியம்மன் கோவில் அருகே சைக் கிளில் சென்றார். அப்போது மின்சார ஒயர் அறுந்து சுப்பிர மணி மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி கழிவுநீர் கால் வாயில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மேல்விஷா ரம் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் மழை யையும் பொருட்படுத்தாமல் கீழ்விஷாரம் அண்ணா சாலை யில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர்.

இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலினால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.