சாதனை படைத்த மாணவர்களை பாராட்டிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் யோகாசன போட்டி

தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வுமாநில அளவில் சாதனை

அரக்கோணம்:

திண்டுக்கல் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவில் யோகாசன போட்டி நடைபெற்றது.

இதில் அரக்கோணம் பாரதிதாசனார் கல்வி குழும மாணவர்கள் பவித்ரன், ஆகாஷ் ஆகியோர் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பாரதிதாசனார் கல்வி குழுமத்தின் இயக்குனர்சுந்தர், முதல்வர் பத்மா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் அனைவரும் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினர்.