உள்ளூர் செய்திகள்

ரெயிலில் ரேசன் அரிசி கடத்தல்

22 மூட்டைகள் சிக்கியது போலீசார் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த திருமால்பூர் ரெயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் மின்சார ரெயிலில் நேற்று இரவு அரக்கோணம் ரெயில்வே போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 25 கிலோ எடை கொண்ட 22 அரிசி மூட்டைகள் இருக்கையின் அடியில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த பெட்டியில் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் உக்கல் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் ரேசன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

அவரை கைது செய்த போலீசார் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.