உள்ளூர் செய்திகள்

லாரி மோதி மூதாட்டி பலி

சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம் போலீசார் விசாரணை

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ராமசாமி தெருவை சேர்ந்தவர் லட்சுமி ( வயது 70 ) .

இவர் நேற்று முன்தினம் ஆற் காடு அண்ணா சிலை அருகே சாலையை கடக்க முயன்றார. அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக் கத்தினர் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட் டார். அங்கு சிகிச்சை பல னின்றி லட் சுமி பரிதாப மாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற் காடு டவுன் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.