காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சம்பத்துராயன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குமாரி குட்டி தலைமை தாங்கிளார்.
சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு கலந்து கொண்டு 42 மாணவ மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களைவழங்கி பேசினார்.
இதனை தொடர்ந்து நாகவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில்தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் 27 மாணவர்க ளுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்க ப்பட்டது.
இதில் நெமிலி ஒன்றிய குழு துணைத்த லைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜோதி அருணாச்சலம் (சிறுணமல்லி), ஆனந்தி பாலசுப்பிர மணியன் (நாகவேடு), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், சங்கரி செல்லப்பன், ஒன்றிய அவைத்தலைவர் புருஷோத்தமன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைஞர்தாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.