உள்ளூர் செய்திகள்

இச்சிப்புத்தூர் ஏரிக்கால்வாயை அகலப்படுத்த வேண்டும்

குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்இயற்கை விவசாய விளை பொருட்களை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டு

அரக்கோணம்:

அரக்கோணம், நெமிலி தாலுகாக்களை உள்ளடக்கிய விவசாயிகளின் குறைதீர்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இச்சிபுத்தூர் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள சாலை விரிவாக்கத்தின் காரணமாக பெரிய ஏரியின் நீர்வரத்து கால்வாயின் அகலம் 16 அடியிலிருந்து தற்போது இரண்டாடியாக குறுகி உள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஏரி நிரம்புமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனை விரைந்து அகலப்படுத்த வேண்டும்.

மேலேரி ஊராட்சியை சேர்ந்த களஞ்சியம் மகளிர் விவசாய குழுவினர் தாங்கள் கூட்டாக சிறுதானியங்களை தொடர்ந்து பயிரிட்டு வருவதாகவும், அதனை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் தெரிவித்தனர்.

அதே பகுதியை சேர்ந்த நம்மாழ்வர் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர் செயற்கை உரம் பயன்படுத்தாமல் இயற்கை விவசாயத்தின் முலம் விளையும் பொருட்களை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் பேசிய வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா உங்கள் கோரிக்கைகள் அனைத்து கலெக்டர் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கூட்டத்தில் அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், நெமிலி தாசில்தார் ரவி, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.