உள்ளூர் செய்திகள்

பஸ் கண்ணாடி உடைப்பு

கற்களை வீசி தாக்கினர் மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

நெமிலி:

திருத்தணியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி செல்லும் தனியார் பஸ் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சேந்தமங்க லத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணியள வில் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் திடீரென்று கற்களை வீசி தாக் குதல் நடத்தினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சை விட்டு அலறியடித்து கீழே இறங்கி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது. போலீ சார் வருவதற்கு முன்பே மர்ம கும்பல் அங் கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.