உள்ளூர் செய்திகள்

பூட்டிய வீட்டில் கொள்ளை

ரூ.3,000 பணத்தை எடுத்து சென்றுவிட்டனர் போலீசார் விசாரணை

மாலை மலர்

காவேரிப்பாக்கம்:

பாணாவரம் அருகே உள்ள கீழ்வீராணம் அடுத்த சூரைகுளம் ரோட்டு தெருவை சோ்ந்தவா் சரோஜா (75). இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகள். இருவருக்கும் திருமணம் முடித்து வெவ்வேறு இடங்களில் குடும்பத்தி னருடன் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்க்கு முன் சரோஜாவின் கணவா் இறந்துவிட்டார். சரோஜா மட்டும் தனியாக வசித்து வருகின்றாா்.

இந்நிலையில் தனியாக இருப்பதால் அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு நேற்று இரவு தூங்க சென்றுள்ளாா்.

நள்ளிரவில் வீடு புகுந்த திருட்டு கும்பல் பீரோவில் இருந்த 1½ பவுன் தங்க நகை, ரூ.3,000 பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.