அரக்கோணம்:
அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் தலைமை நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் வீரா(எ) புருஷோத்தமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சுரேஷ் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் 15 -ந் தேதி முதல் முன்னாள் முதல் -அமைச்சர் அண்ணா பிறந்தநாளில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கவும் நூறு நாள் வேலை திட்டத்தில் கூலி ரூ.294 ஆக உயர்த்திய முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.