குடியரசு தினத்தையொட்டி பாம்பன் ரயில் பாலத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார். 
உள்ளூர் செய்திகள்

பாம்பன் ரெயில் பாலத்தில் போலீசார் ரோந்து

குடியரசு தினத்தையொட்டி பாம்பன் ரெயில் பாலத்தில் போலீசார் ரோந்து சென்றனர்.

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் தீவையும், மண்டபத்தையும் இணைக்கும் வகையில் கடலில் 2.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பாம்பன் கடல் பகுதியில் ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் 110 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த பாலமாகும். 

இந்த பாலத்தில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக  பாம்பன் நுழைவு பகுதியிலும், மண்டபம் நுழைவு பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்ந்து 2.5 கிலோ மீட்டர் தொலை தூரத்திலுள்ள தண்டவாளத்தில் கருவி மூலம் சோதனை செய்தனர்.  ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

SCROLL FOR NEXT