உள்ளூர் செய்திகள்

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.உள்ளாட்சி பிரநிதிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

புதுக்கோட்டை:

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொன்னமராவதி பேரூராட்சியின் சார்பாக 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ. கணேசன் மற்றும் பேரூராட்சி துணைத்தலைவர் வெங்கடேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அடக்கி பழனியப்பன், சாத்தையா நாகராஜ், ராஜா, மருத்துவர் நடராஜன், பேரூராட்சி சுய உதவி குழு , மஸ்தூர் பணியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT