புதுக்கோட்டை:
கல்லாக்கோட்டை இல்லம் தேடி கல்வி மையத்தில் தமிழ்நாடு தின நாள் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தங்கராசு, ரஹமதுல்லா கலந்து கொண்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவது நோக்கம் குறித்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் சர்மிளா, பொம்மி |சசிகலா, பூமாதேவி தங்கம்| பவித்ரா, சிவரஞ்சனி, விமலா, ரேவதி, கலைச்செல்வி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.