உள்ளூர் செய்திகள்

அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா

அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா நடந்தது அன்னதானம் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ பூர்ணகலா புஷ்ப கலா சமேத ஸ்ரீ ஐயனார் ஆலய வருடாபிஷேக விழா நடைபெற்றது. கோவிலை சுற்றியுள்ள பைரவர்நாகர், மதுரைவீரன், காலியாகப்பர், கொம்புக்காரர், செம்மீனேஸ்வரர், கருமுனீஸ்வரர், முத்துமருங்கர், பட்டாணி பெரி கருப்பன் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர்அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாச்சிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

SCROLL FOR NEXT