புதுக்கோட்டை,
புதுக்கோட்டை உழவர் சந்தையில் உள்ள பழமை வாய்ந்த வாகை மரம் திடீரென வெட்டப்பட்டுள்ளது. இதற்கு மரம் வளர்க்கும் சுற்று சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோல் மரங்களை இனி யாரும் வெட்டாமல் இருக்க , மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.