நெல்லை:
கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் உபமின் நிலைய பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.அதன்படி கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், வலசை, சொக்கம்பட்டி, காசி தர்மம், தார்க்காடு, போகநல்லூர், கம்பனேரி, மங்களபுரம், இடைகால், கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் ஆதிலட்சுமி தெரிவித்துள்ளார்.