கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

பொங்கலூர் பகுதியில் நாளை மின்தடை

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். பல்லடம் மின்சார வாரிய இயக்குதல் மற்றும் பேணுதல்

பொங்கலூர் :

பொங்கலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி, உகாயனூர், என்.என். புதூர், காங்கயம்பாளையம், ஓலப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம் புதூர்பகுதியில் மின்தடை ஏற்படும்.

இவ்வாறு பல்லடம் மின்சார வாரிய இயக்குதல் மற்றும் பேணுதல் செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.