உள்ளூர் செய்திகள்

பெண்ணுக்கு பணி நியமன ஆணை-கலெக்டர் வழங்கினார்

பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.பணி நியமன ஆணையை கலெக்டர் கற்பகம் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்

மாலை மலர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் பணியின்போது விஜயபாபு என்பவர் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை கலெக்டர் கற்பகம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். அப்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் காளியப்பன், லெப்பைக்குடிகாடு பேரூராட்சி தலைவர் ஜாஹீர் உசேன், செயல் அலுவலர் சதீஸ் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.