பெரம்பலூர்:
திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் சமஸ்கிருத மொழியில் பேச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூரில் நடைபெற்று வருகிறது. அதற்கான பயிற்சி வகுப்புகளை இலவசமாக திருச்சி சமஸ்கிருத பாரதி குழுமம் நடத்தி வருகிறது. பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் தினமும் 2 மணி நேரம் வீதம் தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.
வகுப்பில் கலந்து கொள்ள சமஸ்கிருதம் முன்பே அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. 13 வயதிற்கு மேற்பட்ட திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 94437 22042 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.