டாக்டர் ராமதாஸ் 
உள்ளூர் செய்திகள்

அலங்கார ஊர்தி அணிவகுப்பில் வடதமிழ்நாட்டு விடுதலை வீரர்களை புறக்கணிப்பதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி

நாகப்ப படையாட்சி, கடலூர் அஞ்சலையம்மாள், ஆதிகேசவ நாயக்கர், ம.பொ.சி. போன்றவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல என டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும்  இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது!

நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை. ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர்.  இவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல!

டெல்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா?  இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். இனி இத்தவறு நிகழாமல் உறுதி செய்ய வேண்டும்!

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... சமூக நீதி கொள்கையை நாடு முழுவதிலும் கொண்டு சேர்ப்போம்: மு.க.ஸ்டாலின் உரை