கடலூரில் மாவட்ட செயலாளர் ஓ.எல். பெரியசாமி, மாவட்ட இணை செயலாளர் ஆசை தாமஸ், இளைஞரணி செயலாளர் ஆர். எஸ்.ரஜினி விக்னேஷ் ஆகியோர் பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழ வகைகள் வழங்கினர்.  
உள்ளூர் செய்திகள்

கடலூரில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நீர் மோர் பந்தல்

இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் ஓம் சிவ சக்தி டைம்ஸ் கடை முன்பு நடைபெற்றது.விழாவில் மாவட்ட செயலாளர் ஓ.எல்.பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலூர்:

கடலூர் மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கோடை வெயிலை முன்னிட்டு இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா கடலூர் ஓம் சிவ சக்தி டைம்ஸ் கடை முன்பு நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் ஓ.எல். பெரியசாமி, மாவட்ட இணை செயலாளர் ஆசை தாமஸ், இளைஞரணி செயலாளர் ஆர். எஸ்.ரஜினி விக்னேஷ் ஆகியோர் தலைமை தாங்கி பொது மக்களுக்கு இலவச நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கினர்.

இதில் மன்ற நிர்வாகிகள் ராஜேந்திரன், இனியன், முருகன்,வினோத், எழிலரசன், கோபால், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT