ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரம்பேட்டை அருகேயுள்ள பெரிய கள்ளப்பாடியை சேர்ந்தவர் தமிழழகன் (வயது 32).
இவர் தனது இருசக்கர வாகனத்தில் பக்கத்து ஊரில் நடந்த ஆடல்,பாடல் நிகழ்ச்சியை பார்க்க சென்றார்.
அப்போது அவரது வாகனம் திருடு போனது. இதுகுறித்து தமிழழகன் தந்த புகாரின்பேரில் சிங்காரம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.