உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் மீது வழக்கு

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியையும், கடத்தலில் ஈடுபட்ட ஆகாஷ் செல்வனையும் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

குழித்துறை, அக்.27-

தக்கலை பனவிளை புல்லாணி விளையை சேர்ந்த வர் ஆகாஷ் செல்வன் (வயது 21). பெயிண்டர். இவர் வழக்கு ஒன்றில் கைதாகி கடந்த ஜூலை மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

வழக்கு

இந்நிலையில் இவர் குலசேகரத்தை அடுத்த நாககோடு அருகே குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியையும், கடத்தலில் ஈடுபட்ட ஆகாஷ் செல்வனையும் தேடி வருகின்றனர்.