உள்ளூர் செய்திகள்

தலைமை செயலகத்தில் அரை கம்பத்தில் பறக்கும் தேசிய கொடி

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரசாரம் செய்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். ஷின்சோ அபேக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக இன்று தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்து இருந்தார்.

சென்னை:

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரசாரம் செய்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக இன்று தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.

அதன்படி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தேசியக்கொடி இன்று அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.