குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகள்

குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

மாலை மலர்

குமாரபாளையம்:

குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் 1.5 கோடியில் விபத்து மற்றும் அவரச சிகிச்சை தனி பகுதி கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதில் வகை படுத்துதல் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, ஐ.சி.யூ. எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை முதல் தளத்தில் அமைக்கப்படவுள்ளது. 

ஆஸ்பத்திரியின் நுழைவுப்பகுதியில் சில தற்காலிக கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

 நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் அவைகளை அகற்றியதால் ஆஸ்பத்திரியின் பகுதி தூய்மையாக உள்ளது குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பாரதி கூறினார்.