உள்ளூர் செய்திகள்

திருச்செங்கோட்டில் ரூ.2.50 கோடிக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.2.50 கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. 

விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.7289 முதல் ரூ.9829 வரையிலும், கிழங்கு மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.7009 முதல் ரூ.8109 வரையிலும் விற்பனை ஆனது.

இதே போல பனங்காளி மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ 15002 முதல் ரூ 21566 வரையிலும் மொத்தம் மூட்டைகள் 5000 தொகை.ரூ.2.50 கோடிக்கு விற்பனை ஆனது.