உள்ளூர் செய்திகள்

பத்திரகிரியார் தியான மையத்தில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் காந்தி நகர் பத்திரகிரியார் தியான மையத்தில் சித்திரை வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மாலை மலர்

குமாரபாளையம்:

குமாரபாளையம் காந்தி நகர் பத்திரகிரியார் தியான மையத்தில் சித்திரை வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

பக்தர்கள் இசைக் கருவிகளுடன் பக்தி இசை பாடல்கள் பாடினார்கள். பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.