குமாரபாளையம்:
குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் அரசு ஆஸ்பத்திரி, அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு செய்தார்.
அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தபோது அங்கு குப்பைகளை அகற்றவும், ஆஸ்பத்திரியின் வளாகம் தூய்மை படுத்தவும், குழாய்கள் பழுதை சரி செய்யவும் தலைமை டாக்டர் பாரதி கோரிக்கை வைத்தார்.
அதற்கு அவர் நகராட்சி அதிகாரிகளை வரவழைத்து நடவடிக்கை எடுக்க அறிவுறித்தினார். அம்மா உணவகத்தில் அங்குள்ள பணியாளர்களிடமும், சாப்பிட வருபவர்களிடமும் குறைகள் கேட்டறிந்தார்.