பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழச்சி நடைபெற்றது.
கபிலர் மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கொரோனாவின் அறிகுறிகள் மற்றும் அதன் கட்டுப்பாடுகள் குறித்து நாடகம் வாயிலாகவும், கொரோனா விழிப்புணர்வு பாடல் மற்றும் நடனத்தின் வாயிலாகவும் பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி துறையூர் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகளால் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணார்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது .
நிகழ்ச்சிக்குதலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார் , ஆசிரியர்கள் மற்றும் 1முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர்.