உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் விடப்பட்டது.

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு சுமார் 3 டன் தேங்காய்களை ‌ விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். 

இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.28.50-க்கும், குறைந்த பட்சமாக ரூ.25-க்கும், சராசரியாக ரூ.26.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.79ஆயிரத்து 156-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ‌ஏலத்திற்கு சுமார் 1¾ டன் தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். 

இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.29-க்கும், குறைந்தபட்சமாக ரூ.23.65-க்கும், சராசரியாக ரூ.‌26.80-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.50 ஆயிரத்து 341-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT