மரவள்ளி கிழங்கின் மகசூலை அதிகரிக்க விவசாயிகளிடம் ஆலோசனை வழங்கிய மாணவிகள் 
உள்ளூர் செய்திகள்

மரவள்ளி கிழங்கின் மகசூலை அதிகரிக்க ஆலோசனை

மரவள்ளி கிழங்கின் மகசூலை அதிகரிப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அருகே உள்ள வேட்டுவம்பாளையத்தைச் சேர்ந்த முத்துலெட்சுமி என்பவரது நிலத்தில் மரவள்ளிகிழங்கின் மகசூலை அதிகரிப்பது தொடர்பான தொழில்நுட்ப விளக்கம் நடைபெற்றது. 

இதில் மரவள்ளி கிழங்கின் நடவுப் பருவம், விதை அளவு, விதைகரணை நேரத்தி, நீர்ப்பாசனம், உரமிடுதல், பயிர் பாதுகாப்பு மற்றும் அறுவடை குறித்த முழு விவரங்களை முத்துலட்சுமியிடம் பி.ஜி.பி வேளாண் கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.