உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்ட நகராட்சிகளில் 34 மனுக்கள் தள்ளுபடி

நாமக்கல் மாவட்ட நகராட்சிகளில் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 34 மனுக்கள் தள்ளுபடியானது.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 19 பேரூராட்சி கள் உள்ளன. இங்குள்ள 447 வார்டுகளுக்கு வருகிற 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 

5 நகராட்சிகளில் உள்ள 153 வார்டுகளுக்கு 900 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நாமக்கல் நகராட்சியில் பெறப்பட்ட 242 மனுக்களில் வேட்புமனு பரிசீலனையின்போது 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதேபோல் குமாரபாளையம் நகராட்சியில் 6 மனுக்களும், ராசிபுரத்தில்  8 மனுக்களும் தள்ளுபடி ஆயின. மொத்தம் 34 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 866 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.