நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளாராக சரவணன் பொறுப் பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு குமாரபாளையம் நகராட்சி தலைவர் சஷ்டி விஜயகண்ணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.