உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி பெண் பலி

ராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில, இவர் கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார்.  செந்தில் குடும்பத்துடன் குழதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டனர். 

அப்போது வீட்டில் இருந்த செந்திலின் தாயார் ருக்மணி (65) குளிப்பதற்காக பாத்ரூமில் வாட்டர் ஹுட்டர் போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில்  ருக்மணி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாமகிரிபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.