அதனைத் தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 7-ம் நாள் வள்ளி தெய்வானையுடன் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இன்று தைப்பூசத்தை முன்னிட்டு குழந்தை வடிவேலுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்காததால் பக்தர்கள் இல்லாமல் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.