கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு

குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் பல கடைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிவண்ணன், குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.இதில் கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 8 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர கடைகள், தினசரி காய்கறி மார்க்கெட், பூக்கடைகள், பழக்கடைகள், ஓட்டல், பேக்கரி, மளிகை, உள்ளிட்ட பல கடைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறி யாளர் மணிவண்ணன், குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 8 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கு ரூ.4 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஆய்வு தினசரி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், சந்தான கிருஷ்ணன், ஜான்ராஜா, மாசுக்கட்டுபாட்டு வாரியம் உதவி பொறி யாளர்கள் சந்தானம், விஜயன் உள்பட பலர் சென்றனர்.