சென்னை:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றன.
பகல் 12 மணி நிலவரப்படி நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் மொத்தம் 1,221 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
285 இடங்களில் அதிமுகவும், 250 இடங்களில் பிற கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.