கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

உத்தமபாளையத்தில் கல்லூரி மாணவி மாயம்

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று மாணவி மாயமானார். புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி ஆசாரி மார் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் மகள் பரமே ஸ்வரி (வயது 18).

தேனியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று மாணவி மாயமானார். இது குறித்து அவரது தாய் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.