உள்ளூர் செய்திகள்

மிலாது நபி பண்டிகை கொண்டாட்டம்

ஊர்வலமாகவும், சிறுவர்கள் நடனமாடியும் சென்றனர். உலகின் 3-வது பெரிய மதம்

மாலை மலர்

கோத்தகிரி

உலகின் 3-வது பெரிய மதமான இசுலாமிய மதத்தினை உருவாக்கிய நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் அனைத்து இசுலாமிய மக்களும் ஒன்றிணைந்து காலை தொழுகையினை முடித்த பின்னர் நபிகள் நாயகத்தின் பெருமையையும், அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இருந்து பஸ் நிலையம், காம்பாய்கடை வரையில் ஊர்வலமாகவும், சிறுவர்கள் நடனமாடியும் சென்றனர்.