கோப்புப்படம். 
உள்ளூர் செய்திகள்

வேன்மோதி வாலிபர் பலி

சீர்காழியில் வேன் மோதியதில் வாலிபர் பலியானார்

மாலை மலர்

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து காரைக்கால் 

நோக்கி மினி லோடு வேன் சென்றது. அதனை காரைக்கால் 

டி.ஆர்.பட்டினம் அல்லிகுளம் தெருவை சேர்ந்த சவுரிராஜன் (58) 

என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அண்ணன் 

பெருமாள் கோவில் ஆர்ச் அருகே சென்றபோது எதிரே 

வந்த டூவீலர் மீது மினி லோடு வேன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் டூவீலரை ஓட்டிவந்த வெள்ளப்பள்ளம் ஐயப்பன் (25) 

என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து 

வந்த அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் (27) என்பவர் 

படுகாயங்களுடன் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் 

சேர்க்கப்பட்டுள்ளார். 

விபத்து குறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் 

வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் சவுரிராஜனை கைது 

செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.