சீர்காழி:
சீர்காழி நகராட்சி தேர்தலை முன்னிட்டு உப்பனாறு, தென்பாதி, கைகாட்டி புறவழிச்சாலை, செம்மங்குடி சாலை சூரக்காடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையில் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் மற்றும் பொருட்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து வருகின்றனர்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரி கூட்டுறவு சார்பதிவாளர் செல்வராணி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களிலிருந்து சீர்காழியை நோக்கி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து ஆவணங்களை சரிபார்த்து அனுப்பி வைக்கின்றனர். மேலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை வீடியோ கேமராவில் பதிவு செய்து வருகின்றனர்.