சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. 
உள்ளூர் செய்திகள்

சமத்துவ பொங்கல் விழா

சீர்காழியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மாலை மலர்

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காரைமேடு 

கிராமத்தில் மறைந்த நாடி ராஜேந்திரா சுவாமிகள் நிர்மானித்த 

ஒளிலாயம் அமைந்துள்ளது.

இங்கு 18 சித்தர்கள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர் 

பசுக்களைப் பாதுகாக்கும் வகையில் கோசாலை

27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் ஆகியவை வைத்து 

பராமரிக்கப்பட்டு வருகிறது. 

ஸ்ரீ சத்குரு 18 சித்தர்கள் ஒளிலாயம் ஆலயத்தில் வருடந்தோறும் 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து மதத்தினரும் 

ஒன்று சேர்ந்து மத நல்லிணக்கத்தோடு பொங்கல் பானை வைத்து 

வழிபாடு செய்வது வழக்கம்.

அதே போல இந்த ஆண்டும் 18 சித்தர் ஆலயத்தில் காரைமேடு, 

தென்னலக்குடி, சூரக்காடு, அண்ணங்கோவில் உள்ளிட்ட 

கிராமங்களை சேர்ந்த கிராம பொதுமக்கள் சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து 

சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொண்டாடினர்.

ஏற்பாடுகளை நாடி.செல்வ முத்துக்குமரன், நாடி. செந்தமிழன், 

நாடி. மாமல்லன், நாடி. பரதன் ஆகியோர் செய்திருந்தனர்.