கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

சீர்காழியில் புறவழிச்சாலை வழியாக சென்ற பஸ்கள் மீது வழக்கு

சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக சென்ற 3 தனியார் பஸ்கள் மீது மோட்டார் வாகன ஆய்வாளர் வழக்குபதிவு செய்தார்.

மாலை மலர்

சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலைவழியாக சென்ற 3 தனியார் பஸ்களை வாகன தணிக்கையின்போது ஆய்வு செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் வழக்குபதிவு செய்தார்.

சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்கு சில தனியார் மற்றும் அரசு பஸ்கள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்வதோடு, பயணிகளையும் புறவழிச்சாலையிலேயே இறக்கிவிட்டு செல்வதால் பயணிகள் அவதியடைந்து வந்தனர்.

அப்போது மயிலாடுதுறையிலிருந்து புதுச்சேரி சென்ற தனியார் பஸ், கடலூரிலிருந்து மயிலாடுதுறை சென்ற தனியார் பஸ் உள்ளிட்ட 3 தனியார் பஸ்களை நிறுத்தி ஆய்வு செய்தார். இந்த பஸ்கள் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக சென்றுவந்தது தெரியவந்தது.