கடலூர்:
கடலூர் பீச்ரோட்டில் வள்ளலார் கோவில் அருகே நடந்து சென்ற 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர்நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். இதில் படுகாயம் அடைந்த அந்த நபர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.