திருப்பரங்குன்றம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக திகழ்வது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு தமிழ் புத்தாண்டு அன்று தங்க கவசமும், ஆங்கில புத்தாண்டு அன்று வெள்ளிக் கவசமும் சாற்றப்படுவது வழக்கம்.
நடப்பு ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு நாளை (14-ந் தேதி) வரவுள்ளது. இதையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமி-தெய்வானைக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்படுகிறது.
இதே போல் மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்படுகிறது.
தமிழ் புத்தாண்டு என்பதால் நாளை சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருவார்கள். இதனால் திருப்பரங் குன்றத்தில் பல இடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப் பட்டு போலீசார் கண்காத்து வருகின்றனர்.
பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.