மதுரை
மதுரை காந்திபுரம் பகுதியில் உள்ள வீட்டில் சகோதரிகள் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு மத்திய அரசுக்கு எதிராக எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் 2 பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள் காந்திபுரத்தைச் சேர்ந்த குணாஜோதிபாசு மனைவி நந்தினி (29), ஆனந்தன் மகள் நிரஞ்சனா (24) என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.