பாம்பு பிடிபட்டது. 
உள்ளூர் செய்திகள்

வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு

வாடிப்பட்டி அருகே வீட்டுக்குள் நல்லபாம்பு புகுந்தது

மாலை மலர்

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன் பட்டி கோட்டைமேடு தெற்குதெருவை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது35). இவரது வீட்டு பாத்ரூமில் இன்ற காலை நல்ல பாம்பு புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கருப்புசாமி உடனே வாடிப்பட்டி  தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பினை பிடித்து குலசேகரன்கோட்டை சிறுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.